சென்னை: சென்னை மணலியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள சோழர் காலத்து சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். 1,200 ஆண்டு காலம் தொன்மையான பஞ்சலோக நடராஜர் சிலை வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த நிலையில், பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்கள்.