×

காவிரி படித்துறையில் ஆகாயத்தாமரை அகற்றம்

பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்று படித்துறையை ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில்  இளைஞர்கள் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் காவேரி ரயில் பாலத்தின் அடியில், படித்துறையில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. ஆற்றில் நீர் வற்றியதும், இந்த ஆகாயத்தாமரை செடிகள் படித்துறை பகுதியை ஆக்கிரமித்து விடுவதால், படித்துறையை மக்கள் உபயோகிக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று காவேரி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காவிரி ஆற்றில் இறங்கி ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். படித்துறை பகுதியில் கரையோரம் படர்ந்து கிடந்த ஆகாயத்தாமரை செடிகளை வெட்டி, ஆற்றின் நீரோட்டத்தில் இழுத்துவிட்டனர். அவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இளைஞர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Tags : Agayathamar , Pallipalayam: In Pallipalayam, youths were engaged in the removal of agayathamarais that had encroached on the Cauvery river bank.
× RELATED முத்துப்பேட்டை அருகே வளவனாற்றில் கிராம மக்களே ஆகாயத்தாமரை அகற்றினர்