சென்னை: இ- சேவை மையங்கள் மூலம் திருமணமாகாதவர் என்ற சான்றினை பெற்றுக் கொள்ளலாம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருமணம் நடத்த விரும்புவோர் இச்சான்றினை சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.