டெல்லி: விமான நிலையங்களில் செக் இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் பெறும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செக் இன் கவுண்டர்களில் வழங்கப்படும் போர்டிங் பஸ்களுக்கு சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்தில் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.