×

ஆக.13 முதல் 15 வரை 'வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்' : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!!

டெல்லி : ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே 75வது சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.  அந்த வகையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கும் ஒன்றிய  அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்  பக்கத்தில், இந்த ஆண்டு நாம் அசாதி கா அம்ரித் மோட்சாவ்  என்ற பெயரில் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதை ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை உங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்கள் .இந்த இயக்கம் தேசிய கொடியுடன் நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : PM ,Modi , National flag, people of the country, Prime Minister Modi, request
× RELATED பிரதமர் பதவியில் இருந்து கொண்டு...