×

இலங்கை, துபாயில் இருந்து 4.15 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பயணிகள் கைது

சென்னை:  இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த 2 பயணிகள் உள்ளாடைகளுக்குள் 6 பார்சல்களில் 2.58 கிலோ தங்கப்பசை இருந்தது. இந்நிலையில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அப்போது சென்னையை சேர்ந்த 2 பயணிகளிடமிருந்து உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த 4 பார்சல்களில்  1.57 கிலோ தங்கப்பசை, தங்கக்கட்டிகள் இருந்தது. மேலும் அவர்களின் உடமைகளில் ரூ.18.15 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர். சென்னை விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் வந்த 2 விமானங்களில் ரூ.1.82 கோடி மதிப்புடைய 4.15 கிலோ தங்கம், ரூ.18.15 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்கள், சிகரெட்கள் உள்பட மொத்தம் ரூ.2.15 கோடி பொருட்கடய பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் கைதாகினர்.

Tags : Sri Lanka ,Dubai , Sri Lanka arrested 4 passengers who smuggled 4.15 kg of gold from Dubai
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...