×

சிறுகாவேரிப்பாக்கத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் வாகன தணிக்கையின்போது ரேஷன் அரிசி கடத்திச் சென்றவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கீழ் அம்பி பகுதியில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.

இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையில் போலீசார் சிறுகாவேரிப்பாக்கம் இபி அவென்யு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வந்த மாருதி ஆம்னி வேனை வழிமறித்தி நிறுத்தி சோதனை செய்தபோது, 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகளில் 1.25 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் பெரியசாமி மகன் பாஸ்கர் என்பவரை கைது செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sirukaveripakkam , Smuggling, smuggling of ration rice, arrest
× RELATED காஞ்சிபுரத்தில் சளி மற்றும்...