சென்னை: மாநிலம் முழுவதும் சமத்துவ மயானம் அமைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது. பட்டியலின, பழங்குடியினருக்கு எதிரான கொடுமையை தடுக்காத காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.