சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றோர் வாங்க ஆணையிடக்கோரும் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது. ஏற்கனவே, பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என நீதிபதி தெரிவித்தார். அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடைபெற்றதாக அரசு தரப்பு வாதம். உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி நாளை காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.