சென்னை: அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜரான நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு பற்றிய கணக்கு விபரங்கள் முறையாக வருமான வரித்துறை முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விபரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.