×

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மின் ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அவர்கள் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர். இதன் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது, 100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை வேண்டாம் என விரும்புவோர்,  கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றார்.

வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்தபின், வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.



Tags : Minister ,Senthil Balaji , After installation of smart meters, monthly electricity calculation will be implemented: Minister Senthil Balaji
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...