×

பாரதியார் பாடலை தூய தமிழில் பாடி அசத்திய அருணாச்சல பிரதேச சகோதரிகள்: தமிழில் பாராட்டி அசத்திய பிரதமர் மோடி.!

டெல்லி : பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் பாடலை அருணாச்சலப்பிரதேச சகோதரிகள் பாடியது கேட்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் பாடலை சிறுமிகள் பாடி அசத்தியுள்ளனர். பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்னும் சுதந்திரப் போராட்ட பாடலை தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் பாடி உள்ளனர். இதனை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமிழில் ட்வீட் செய்துள்ள அவர், இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள், எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பிரேம கண்டு பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரி-ட்விட் செய்துள்ளார்.

Tags : Arunachal Pradesh ,Modi , Bharatiyar, Arunachal Pradesh, Sisters, Tamil
× RELATED பிரித்தாளும் சூழ்ச்சிதான் பாஜவின்...