அருமனை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கொடுக்கச்சிவிளை இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (56). கூலி தொழிலாளி. திமுக பிரமுகர். இந்த நிலையில் தாஸுக்கும், மலைக்கோடு இடைக்கோடு பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான பிரேக் என்ற ஸ்டான்லி (55)க்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடுக்கச்சிவிளை சந்திப்பில் தாஸ் நின்றிருந்தார். அந்தவழியாக ஸ்டான்லி வரவே 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஸ்டான்லி நடத்திய கொலைவெறி தாக்குதலால் அருகில் இருந்த சுவர் மீது தாஸ் மோதினார். இதில் படுகாயமடைந்த அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.