×

உக்கடம் பெரியகுளத்தில் 12 பேர் வரை பயணிக்கக்கூடிய நவீன படகு

கோவை : கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைத்து அங்கு  உணவுக்கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்  அமைக்கப்பட்டு உள்ளன.  உக்கடம் வாலாங்கும் மற்றும் பெரியகுளம் ஆகிய குளங்களில் படகு சவாரி  அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை வாலாங்குளத்தில் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி விரைவில் தொடங்கப்பட உள்ளன. அதற்காக, உக்கடம் பெரிய குளத்திற்கு குஜராத்தில் இருந்து அதிநவீன படகுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.  

இது குறித்து மாநகராட்சி அதிகாரிக்ள் கூறுகையில், ‘கோவை உக்கடம் பெரிய குளத்துக்கு குஜராத் மாநிலத்தில் 12 பேர் வரை பயணம் செய்யக்கூடிய அதிநவீன படகு கொண்டுவரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 2 பெரிய சைக்கிள் பெடல் படகுகள், 2 துடுப்பு படகுக மற்றும் 2 ஸ்கூட்டர் படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. விரைவில் படகு சவாரி தொடங்கும்’ என்றார்.

Tags : Ukkadam ,Periyakulam , Coimbatore: Ukkadam Periya Pond, Valangulam, Selvasintamani Pond, Mutthannan Pond in Coimbatore Corporation area.
× RELATED மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு