×

நீடாமங்கலம் அருகே காரை பெயர்ந்து விழுந்த வகுப்பறை கட்டிடம் இடிப்பு-அதிகாரிகள் நடவடிக்கை

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ளது முன்னாவல்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள வகுப்பறை ஒன்று சிமெண்ட் காரைகள் விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்தது. சில நேரங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன.

மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறையை விபத்து ஏற்படும் முன் உடனே இடித்து விட்டு புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என்று மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இந்த எதிரொலியால் கடந்த சில நாட்களாக ஆட்களை வைத்து பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த பள்ளியின் பெற்றோர்கள் செய்தியை படத்துடன் வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் பள்ளி கட்டிடம் இடிக்கும் போது தூசிகள் பள்ளிக்குள் செல்வதால் பள்ளி கட்டிடம் இடிக்கும் பணியை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என்றனர்.

Tags : Needamangalam , Needamangalam : Munnavalkot Govt Higher Secondary School is near Needamangalam in Tiruvarur district. 6th to 12th standard
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில்...