சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர், சையத் ரோஹித் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து சாட்சியம் அளித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என மனுவில் தெரிவித்தார்.