சென்னை; நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.