×

அவிநாசியில் கோயில் அஸ்திவார பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: தொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்பு!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கோயில் கட்டுமான பணிக்காக சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி அஸ்திவார பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளர். அவிநாசி அடுத்த குன்னத்தூரில் சந்தைக்கடை அருகே பிரிசித்தி பெற்ற அரண்மனை மாரியம்மன் கோயிலில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றபோது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி அஸ்திவார பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திங்களூரை சேர்ந்த ராமசாமி சிக்கிக்கொண்ட நிலையில் அவரை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டிட தொழிலாளி ராமசாமி சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Avinasi , Avinasi, Temple, Asthivaram, Lorry, Accident, Someone got stuck
× RELATED அதிகாரத் திமிரில் அராஜகங்களும்,...