×

ஆவடி மாநகராட்சியில் புதிய மின்கம்பங்கள் மாற்றம்

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆவடி மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் பழுதான மின்கம்பங்கள் அப்படியே கிடப்பதால் மழைநீர் கால்வாயை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. மின்சார துறை அலட்சியத்தால் கால்வாய் கட்டும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது. உடனே மின்சாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அவசர தேவைக்கு கடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. எனவே உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 2ம் தேதி நமது தினகரன் நாளிதழில் இதுகுறித்து செய்தி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அறிவுறுத்தலின்படி மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் மின்கம்பங்கள் மாற்றும் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தினகரன் நாளிதழுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.



Tags : Awadi Corporation , Avadi Corporation, New Poles, Electricity Department
× RELATED மார்க்கெட் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: நோய்தொற்று அபாயம்