×

பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் காலாண்டின் நிதி முடிவு வெளியீடு

சென்னை: பாங்க் ஆப் மகாராஷ்டிரா  2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டின் நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.அந்த முடிவுகளின் விவரங்கள்: பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நிகர லாபம் இரண்டு மடங்கு உயர்ந்து ரூ452 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வர்த்தகம் 18.07% அதிகரித்து ரூ3,36,470 கோடியாக உள்ளது. நிகர லாபம் 117.25% அதிகரித்து ரூ452 கோடியாக உள்ள இந்த காலாண்டில் செயல்பாட்டு லாபம் ரூ1202 கோடியாக மேம்பட்டுள்ளது. 2022ம் நிதியாண்டின் இதே காலாண்டில், தனித்தனி அடிப்படையில் ரூ208 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக கடன் வழங்குநர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் கூறுகையில், `ஊழியர்களின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் இருந்தபோதிலும், வங்கி சிறப்பாகச் செயல்பட்டு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 117.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாம் காலாண்டில் இருந்து அதிக வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எதிர்கால வளர்ச்சியில் மிகவும் சாதகமாக இருக்கிறோம். தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து ரூ130 கோடியை மீட்டுள்ளது. 2023ம் ஆண்டு நிதியாண்டில் ரூ3,000 கோடியை மீட்டெடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்’ என்றார்.


Tags : of Maharashtra , Release of Bank of Maharashtra Quarterly Financial Results
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...