சேலம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் வற்புறுத்தல் காரணமாக மின்சார கட்டணத்தை உயர்த்தியதாக மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசு அவ்வாறு கூறவில்லை. ஏற்றவுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெறாவிட்டால் வருகிற 23ம்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.