×

ஈரோடு அருகே தெருக்கூத்து நாடகத்தில் கூத்து ஆடிக்கொண்டிருந்த கலைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.: வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல்

ஈரோடு: ஈரோடு அருகே தெருக்கூத்து நாடகத்தில் கூத்து ஆடிக்கொண்டிருந்த கலைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குப்பன்துறை கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரணியன் தெருக்கூத்து நாடகம் நடைபெற்று வருகிறது.

இந்த தெருக்கூத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜய்யன் என்பவர் வேடமிட்டு நடித்து வந்துள்ளார். நேற்று இரவு தெருக்கூத்து நடந்த போது ராஜய்யன் இரணியன் நாடகத்தில் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அந்த மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக ராஜய்யன் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், தெருக்கூத்து நாடகத்தில் நடிக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Tags : Erode , An artist who was dancing in a street play near Erode suddenly fainted and died.: Video goes viral on social media
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...