×

நாட்டின் 75-வது சுதந்திர தினதையொட்டி அசாமில் 80 லட்சம் தேசியக் கொடிகளை ஏற்ற மாநில அரசு திட்டம்..!

திஸ்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர தின அமிர்தப் ‍பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹர் கர் திரங்கா எனப்படும் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய கலாச்சாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது. அஸ்ஸாமில் அடுத்த மாதம் 13-ம் தேதிமுதல் 15-ம் தேதிவரை கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்ள  வீடுகள், வர்த்தக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 80 லட்சம் தேசியக் கொடிகளை ஏற்ற அசாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


Tags : Assam ,Independence Day , On the occasion of the country's 75th Independence Day, the state government plans to hoist 80 lakh national flags in Assam..!
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...