×

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கம் தொடர்ந்ததால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Parliament , Opposition parties are in a frenzy: Both houses of Parliament are paralyzed
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...