×

ஆடி மாத பூஜைகள் சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள் நடந்து வரும் நிலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சாதாரணமாக மாத பூஜைகள் நடைபெறும் போது சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருக்கும். ஆனால் நேற்று வழக்கத்தைவிட சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

நேற்று முன்தினம் ஆடி மாதம் முதல் தேதி என்பதால் அதிகாலை முதலே தரிசனத்திற்காக பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். இதனால் 4 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வரும் நாட்களிலும் இதே போல பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆன்லைன் முன்பதிவை கேரள போலீசார் தான் இதுவரை நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த பொறுப்பு சமீபத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

Tags : Sabarimala ,Aadi , Devotees gather at Sabarimala for Aadi month pujas
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு