×

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரையும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுப்பட்டதாக காவல்துறை சார்பில் 108 பேர் கைது செய்யப்பட்டனர். இதுல் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 108 பேரை கொட்டும் மழையிலும் நீதிமன்ற நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 128 பேரில் 20 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை விழுப்புரத்தில் செஞ்சி பகுதியில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 108 பேரையும் கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

இதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட 108 பேரையும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Kallakurichi , All 108 arrested in Kallakurichi riot ordered to be jailed!
× RELATED பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி...