×

சர்வதேச போட்டிகளில் நாட்டிற்க்கு பெருமை சேர்த்த இந்தியாவின் பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச போட்டிகளில் நாட்டிற்க்கு பெருமை சேர்த்த இந்தியாவின் பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில் சிங்கப்பூர் ஒபெனில் பட்டம் வென்றுள்ள சிந்துவை பாராட்டியுள்ளார். இதே ஆற்றலோடும், உத்வேகத்தோடும் பிர்மிங்காம் மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாட வாழ்த்துவதாக சிந்துவை ஸ்டாலின் உற்சாகபடுத்தி உள்ளார்.

செஸ் விளையாட்டில் 2700 இ.எல்.ஓ. என்ற மைல் கல்லை எட்டிய சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷின் சிறப்பு மிகவும் அரியது என்று குறிப்பிட்டுள்ளார். அடிவானத்தில் புதிய விண்மீனாக காட்சி அளிக்கும் குகேஷிடமிருந்து எதிர்காலத்தில் இன்னும் பல உயர்தகு சாதனைகளை காணப்போகிறோம் என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பாரிஸ் ஓபன் செஸ் போட்டியில் வென்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இரு இளம் கிராண்ட் மாஸ்டர்களும் எதிர்வரும் மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,India ,Sindhu ,Gukesh ,Pragnananda , International Competition, India PV Sindhu, Gukesh, Pragnananda, Chief Minister, MK Stalin, Congratulation
× RELATED செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி...