×

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பஸ் டே கொண்டாடியதால் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பஸ் டே கொண்டாடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட பஸ் டே கொண்டாட்டத்தை சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து அரும்பாக்கம் வரை செல்லும் மாநகர பேருந்தில் ஏறி கொண்டாடினர்.

ஒவ்வொரு வருடமும் இதுபோன்று பேருந்து தினத்தை கொண்டாட கூடாது என எச்சரித்த பிறகும் இன்று 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்காடு-லிருந்து பாடி செல்லும் மாநகர பேருந்தில் ஏறிக்கொண்டு ஊர்வலமாக சென்று போக்குவரத்து தடையை ஏற்படுத்தும் வகையிலும் பேருந்தில் உள்ள பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுப்பட்டனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் மாணவர்களிடம் பேச முயன்றாலும் மாணவர்கள் தொடர்ந்து ஊர்வலமாக சென்றதால் ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டது.

Tags : Chennai ,Pachaiyappan College ,Bus Day , Heavy traffic jam in Chennai as students of Pachaiyappan College celebrated Bus Day in violation of the ban
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...