×

சோழவரம் அருகே கோயில் கோபுர கலசம் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

புழல்: சோழவரம் அருகே கோயிலில் கோபுர கலசத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். சோழவரம் அடுத்த சோத்துபெரும்பேடு கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீலட்சுமி நாராயணன் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது, சில பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தபோது, கோபுரத்தில் ஒரு கலசம் காணாமல்போனது பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்,  இதுபற்றி பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள்  சோழவரம் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபுர கலசத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Cholavaram , Temple tower urn theft near Cholavaram: Police net for mysterious persons
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...