சென்னை: எம்ஜிஆர் கழகத் தலைவர் வீரப்பன் விரைவில் நலம்பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிந்தேன். அவர் விரைவில் முழுமையாக நலம்பெற வேண்டும் என விழைகிறேன்’ எனக்கூறப்பட்டுள்ளது.