சென்னை, : திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரனின் மாமியார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரனின் மாமியாரும், திரைப்பட இயக்குநர் கர்ணனின் துணைவியாருமான சகுந்தலா மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறப்பட்டுள்ளது.