திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்றுமுன்தினம் 84 ஆயிரத்து 885 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 41 ஆயிரத்து 211 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ4.35 கோடி காணிக்கை இருந்தது. நேற்றைய நிலவரப்படி கோயிலில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 அறைகளும் நிரம்பியுள்ளது. இலவச தரிசன வரிசையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.