சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஸ்குமார் அறிவித்துள்ளார். மரணத்தில் சந்தேகம் உள்ளதால் தங்கள் தரப்பு மருத்துவர்களை கொண்டு மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.