×

மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் எடப்பாடியை சந்தித்து ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். அதிமுகவின் கழக அமைப்பு செயலாளராக பதவி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கியுள்ளார். அதிமுகவிற்கும், அவருக்கும் விசுவாசமாக செயல்படுவேன். அதிமுக தொண்டரின் புனித தலமாக கட்சித்தலைமை அலுவலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்.

ஓபிஎஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவில் ஜாதிரீதியாக பதவி வழங்குவதில்லை. ஓபிஎஸ், எடப்பாடியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஓ.பி.ரவீந்திரநாத்தை நீக்கியதால் அதிமுகவுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலத்தை நிர்ணயிக்க முடியாது. தொண்டர்களின் பலமே அதிமுக. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Edappadi ,Former Minister ,Chellore Raju , Edappadi, OPS, Former Minister Sellur Raju
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்