×

ராசிபுரம் அருகே ஓடும் பேருந்தில் எற முயன்ற முதியவரை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கிய விவகாரம்: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓடும் பேருந்தில் எற முயன்ற முதியவரை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கினார். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ராசிபுரத்தை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தில் ஒருவர் எற முயன்றபோது தடுமாறியதாக கூறப்படுகிறது இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் முரளி கிருஷ்ணா முதியவரை தகாத வார்த்தையால் திட்டிள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் முதியவரை சராமரியாக தாக்கியுள்ளார்.

இதனிடையே தன்னை தாக்கிய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் ராசிபுரம் போக்குவரத்து கழகத்தில் புகார் அளித்துள்ளார். முதியவர் கொடுத்த புகாரை அடுத்து முதியவரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்  முரளி கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஓட்டுநரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சேலம் போக்குவரத்து பொது மண்டல மேலாளர் இலட்சுமணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Rasipuram , A government bus driver hit an old man who tried to throw him into a moving bus near Rasipuram, Driver's post dismissed
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து