×

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை என திருமலை தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் வேதாச்சலம் உயிரிழந்தது குறித்து  திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. தரிசனத்துக்காக வரிசைக்கு வருவதற்கு முன்பே கழிவறைக்கு சென்றபோது கால் தவறி வேதாச்சலம் கீழே விழுந்து மயங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவர் வேதாச்சலம் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags : Tirupati Seven Malayan Temple , Tirupati Seven Malayan Temple, Devotee, Death, Devasthanam Description
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த...