சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகம் காவி மையமாகிக் கொண்டிருப்பதை உயர்கல்வி அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும். பெரியார் பல்கலைக்கழக தேர்வில் எது தாழ்ந்த சாதி என கேள்வி கேட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் கி.வீரமணி கூறியுள்ளார்.