செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், எஸ்டிஏடி சார்பில், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. இதனை, கலெக்டர் ராகுல் நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.