×

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்

மதுரை: விடுமுறை  கால கூட்ட நெரிசலை தவிர்க்க, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக  திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ரயில்நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சேவை  சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி,  திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஜூலை 21  முதல் ஆகஸ்ட் 18 வரை வியாழக்கிழமைகளில், திருநெல்வேலியில் இருந்து இரவு 7  மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணியளவில் மேட்டுப்பாளையம்  சென்றடையும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர  சேவை (06029) சிறப்பு ரயில் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 19 வரை  வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு  புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த  ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம்,  தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர்,  சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி,  உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று  செல்லும்.  திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன  இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை  வசதிப்பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டிகள், 3 இரண்டாம்  வகுப்பு பொதுப்பெட்டிகள், 1 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான  பெட்டி இணைக்கப்படும்.

Tags : Tirunelveli ,Madurai ,Madupalam , Special train between Tirunelveli - Mettupalayam via Madurai
× RELATED ஆட்டுச்சந்தைக்கு சென்று திரும்பிய ஆடு வியாபாரி பரிதாப சாவு