மாலே: மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் செல்ல தனியார் ஜெட் விமானம் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் செல்ல முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் சிங்கப்பூரில் தஞ்சம் அடைய திட்டமிட்டிருக்கிறார்.