×

கடலூர் அருகே பள்ளியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி வாட்டர் பாட்டில்களுடன் மாணவர்கள் சாலை மறியல்..!!

கடலூர் அருகே பள்ளியில் குடிநீர் வழங்காததை கண்டித்து மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஐவதுகுடி கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி உள்ளது. காலி வாட்டர் பாட்டில்களுடன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Cuddalore , Cuddalore, school, drinking water, empty water bottle, students, protest
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!