கடலூர் அருகே பள்ளியில் குடிநீர் வழங்காததை கண்டித்து மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஐவதுகுடி கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி உள்ளது. காலி வாட்டர் பாட்டில்களுடன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.