×

ஆடி மாத பூஜை; சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. வரும் 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. இதை முன்னிட்டு, ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும். 21ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும். இதையடுத்து தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. நிலக்கல்லில் உடனடி முன்பதி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Tags : Aadi ,Sabarimala , Aadi month puja; Sabarimala walk opening on 16th
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு