×

வானளாவிய அதிகாரம் இருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைக்க கூடாது: வைகோ கண்டனம்

சென்னை: தமிழக ஆளுநர், தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்து செயல்படக் கூடாது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி கவனத்திற்கு வராமலேயே பல்கலைக்கழக நிர்வாகம் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.
 
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடியான செயல்பாடுகள், போட்டி அரசு நடத்துவதைப் போல இருக்கிறது. அவர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிப்பதையும், அதிகார வரம்பை மீறி செயல்படுவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அலட்சியப்படுத்துவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அரசியல் மேடையாக்குவதற்கு வழிவகுத்து தந்துள்ள ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டத்துக்கு உரியதாகும். தமிழக ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துச் செயல்படுவதையும், பேசுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Tags : Tamil Nadu ,Governor ,R.R. N.N. Ravi ,Vigo , Tamil Nadu Governor RN Ravi should not think that he has sky-high power: Vaiko condemns
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...