விழுப்புரம்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நான் வருவேன் என நினைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் இதனை தெரிவித்துள்ளார். நம்முடன் இருந்து கொண்டே சூழ்ச்சி செய்து நமது வெற்றியை தடுக்க பார்த்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.