கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். அதிபரின் ராஜினாமா கடிதம் கிடைக்கப்பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்று கிடைக்கப்பெறும் என்று சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.