×

நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழையின் தாக்கல் அதிகரித்து காணப்படுகிறது. குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுக்காக்களில் மழை கொட்டி வருகிறது. பகல் நேரங்களில் மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், இரவு நேரங்களில் அதிகமாக மழை பதிவாகி வருகிறது. உதகை, குந்தா தாலுகாக்களில் உள்ள பகுதிகளில் தினந்தோறும் 5 செ.மீ க்கு மேல் பதிவாகி வருகிறது.

கூடலூர், பந்தலூர் பகுதியை பொறுத்தவரை தினந்தோறும் 8 செ.மீ. முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டார்.


Tags : Nilgiri , Holiday notification for schools in 4 taluks in Nilgiris district today
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ...