மதுரை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி 50 முறை தான் பயணிக்கவேண்டும் என கட்டுப்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பேருந்துகள் கடந்து செல்லக்கூடியதை பொறுத்து, அதற்கு ஏற்றாற்போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, விருதுநகர், திருச்சி தனியார் பேருந்து உரிமையாளர்கள் நல சங்கம் தொடர்ந்த வழக்கில், கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் நல சங்க செயலாளர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
அதில், உயர்நீதிமன்றகிளையில் சாலைகள் முறையாக பராமரிக்க வேண்டும், சுங்கச்சாவடிகள் அவற்றை உறுதிப்படுத்தவேண்டும் என்றும், மாத கட்டண சலுகை பாஸ் போன்றவற்றை முறைப்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.