சென்னை: யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேச்சுரிமை எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வு கருத்து தெரிவித்திருக்கிறது. சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.