சேலம்: காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சேலத்தில் மெக்கானிக் மகேஷை(32), கடந்த 2020-ல் கோவில் திருவிழாவின்போது 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. கொலை தொடர்பாக ரமேஷ், விஜயகுமார், ரவிகுமார், வெள்ளையன் ஆகியோரை மல்லூர் போலீஸ் கைது செய்தது.