×

நடத்தை சந்தேகத்தால் பயங்கரம் சம்மட்டியால் அடித்து இளம்பெண் படுகொலை: போலீசில் கணவன் சரண்

செங்கம்: நடத்தை சந்தேகத்தால் மனைவியை சம்மட்டியால் அடித்து கொலை செய்துவிட்டு போலீசில் கணவன் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி (35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி(30). இவர்களுக்கு ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர். இருவரும் படித்து வருகின்றனர். விஜி, அடிக்கடி திருப்பூருக்கு வேலை விஷயமாக சென்று வருவாராம். இதனால் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் அவர் வீட்டுக்கு வருவாராம். விஜியின் தாய் தேவிகா, மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய விஜி, அதன்பின்னர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இதனிடையே செல்வியின் நடத்தை மீது விஜிக்கு சந்தேகம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு 8 மணியளவில் தனது தாய் தேவிகா மற்றும் பிள்ளைகளை அருகில் உள்ள கோயிலுக்கு சென்றுவரும்படி விஜி அனுப்பியுள்ளார். வீட்டில் மனைவி மட்டும் இருந்தார். அப்போது திடீரென சம்மட்டியை எடுத்து செல்வியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் செல்வி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மேல்செங்கம் போலீசில் விஜி சரணடைந்தார். போலீசாரிடம், ‘எனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அவரை சம்மட்டியால் அடித்துக்கொலை செய்துவிட்டு வந்தேன்’ என தெரிவித்தாராம். இதுகுறித்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கோயிலுக்கு சென்று திரும்பிய மகன், மகள் மற்றும் விஜியின் தாய் ஆகியோர் செல்வி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதனர். இதுதொடர்பாக விஜியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Saran , Suspicious behavior, murder of teenage girl, husband in police
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...